யாழ்ப்பாணம் கீரிமலைக் கடற்கரைப்பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க சடலமே கரையொதுங்கியது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
காங்கேசந்துறைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அந்தப் பகுதிக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.
சடலத்துக்கு அருகில் மதுபானப் போத்தல் மற்றும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

