யாழில் பாரவூர்தியில் சடடவிரோதமாக எதனோல் போதைப்பொருட்களை கடத்திச்சென்ற சந்தேக நபர்களை சுன்னாகம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்தனர் .

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் போதைப்பொருட்களையும், அதிரடிப்படையினர் சுன்னாகம் பொலிஸாரிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைத்துள்ளனர்.
யாழில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, இப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பாரவூர்தி ஒன்றுடன், 372 எதனோல் போத்தல் காண் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வாரு காணும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்தமாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் , கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.